
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!வேலூர், ஏப். 29-சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இதுகுறித்து விடுத்துள்ள அறிவிப்பு: வரும் 30ம் தேதி இரவு 9 மணி முதல் மே 1ம் தேதி இரவு 11.07 மணி வரை திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.கிளாம்பாக்கத்தில் இருந்து 30ம் தேதி 548 பேருந்துகளும், மே 1ம் தேதி 565 பேருந்துகளும் இயக்கம்.மாதவரத்தில் இருந்து 30ம் தேதி 186, மே 1ம் தேதி 174 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.அதேபோன்றே வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply