காட்பாடி தொகுதியில் வாக்குப்பதிவு அறையை சுத்தம் செய்யும் பணி!வேலூர்,ஏப்.23-தமிழகத்தில் இன்று (23ஆம் தேதி) சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு அறையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம், காட்பாடி சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் மேற்பார்வையில் இந்த வாக்குப்பதிவு அறையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. சுத்தம் செய்த பணிகள் நிறைவு பெற்றதும் கொசுக்களை ஒழிப்பதற்கு புகை அடிக்கப்பட்டது. வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் சிரமமின்றி பணியாற்ற வாக்குப்பதிவு அறை சத்தம் செய்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.