
கே.வி.குப்பத்தில் ஜெகன் மூர்த்திக்கு ஜெயம்!வேலூர், ஏப். 21-முழுக்க முழுக்க கிராமங்களை கொண்ட கே.வி.குப்பம் தனி சட்டமன்றத் தொகுதியில், இரண்டாவது முறையாக களமிறங்கும் சிட்டிங் எம்எல்ஏ புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வெற்றியை நோக்கி வலம் வருகிறார். யோகம் அவருக்கு அடிக்கும் என்பது தொகுதியின் ஹைலைட்.2008-இல் தொகுதி மறுசீரமைப்பில் புதியதாக உருவான கே.வி.குப்பம் தனி சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறையும் அதிமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருந்துள்ளது.2011-இல் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், 2016-இல் அதிமுகவின் ஜி.லோகநாதன், 2021-இல் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி என அதிமுக அணியினரே ஜெயித்தனர்.இந்த முறையும் பூவை ஜெகன்மூர்த்தியே களம் பலம் இறங்குகிறார்.திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சொந்த தொகுதி என்பது அவரது மகன் எம்பி கதிர் ஆனந்த் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் இந்த தொகுதியை வெற்றி பெற்றே தீருவேன் என்ற கட்டாயத்தில் உள்ளார்.தொகுதி உருவான நாளிலிருந்து நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்று, திமுகவை தோல்வியை தழுவ செய்த தொகுதி கே.வி. குப்பம். இந்த முறை எப்படியாவது காட்பாடியோடு, கே.வி.குப்பத்தையும் எப்படியாவது கரையேற்றி விட வேண்டும் என்று கட்டாயத்தில் கதிர் ஆனந்த் தொகுதியை சுற்றி சுற்றி வலம் வருகிறார்.’வைட்டமின் ப’வை அள்ளி அள்ளி விட்டாலும், இதுவரை கிள்ளி கிள்ளி கொடுத்தவர் என்ற பெயரெடுத்த கதிர் ஆனந்தை மக்கள் ரசிக்கவில்லை.உங்களுக்காக செருப்பாய் உழைக்கிறேன் என்று கதிர் ஆனந்த் சொல்வதை மக்கள் ஏற்கவும் தயாராக இல்லை.ஐந்தாண்டுகள் எம்எல்ஏவாக இருந்த ஜெகன் மூர்த்தி தான் செய்த சாதனைகளை பட்டியலிடுவதோடு, நிறைவேற்ற முடியாத சாதனைகளுக்கு திமுக அரசே காரணம் என்பதற்கான விளக்கத்தை மக்கள் மத்தியில் சரியான பதில் கூறுகிறார்.ஐந்தாண்டுகளில் எந்தவிதமான புகாருக்கும் ஆளாகாதவர் ஜெகன்மூர்த்தி என்பது மக்கள் மத்தியிலே அவருக்கு இருக்கும் நற்பெயர். திமுக சார்பில் களம் இறங்கும் ராஜேஸ்வரி 2011ல் வேலூர் மேயர் வேட்பாளராக நின்று தோற்றவர். அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியை உதறி விட்டு அப்போது தேர்தல் களம் கண்டவர். அதன்பின் 15 ஆண்டுகள் தன் மருத்துவமனையிலேயே பணியாற்றி விட்டு தற்போது தேர்தலில் களம் இறங்கி இருப்பது திமுகவினரை ரசிக்க வைக்கவில்லை.திமுகவில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தவர் தொகுதியை வலம் வந்தாலும் மன வருத்தம் அவர்களுக்கு இருக்கவே செய்கிறது.காட்பாடி, கே. வி. குப்பம் ஆகிய இரு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக உள்ள கதிர் ஆனந்துக்கு நெருக்கடி குழு கொடுக்கவும் திமுகவில் ஒரு தரப்பு தயாராகவே இருக்கிறது.மொத்தத்தில் ஜெகன்மூர்த்திக்கு ஜெயமாகவே இருக்கிறது என்கின்றனர் மக்கள்.










Leave a Reply