
கோட்டையை பிடிக்கிறார் எஸ். ஆர்.கே.அப்பு!வேலூர், ஏப் .22-சிப்பாய் புரட்சி நடந்த வேலூர் கோட்டைக்கு ஒரு வரலாறு உண்டு. அரசன் இல்லா கோட்டை என்பார்கள்.வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்தக் கோட்டையை எம்எல்ஏவாக இந்த முறை அலங்கரிக்கப் போவது எஸ். ஆர்.கே. அப்பு என்கின்றனர் மக்கள்.திமுகவின் தொடக்க காலத்தில் செல்வாக்கு பெற்ற ஊர்களில் வேலூர் ஒன்று.’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று அறிஞர் அண்ணா கூறியது இந்த ஊரில் தான்.எப்போதும் திமுகவின் ஆதிக்கம் நிறைந்த தொகுதியில் 2011 இல் அதிமுகவின் டாக்டர் வி. எஸ்.விஜய் வெற்றி பெற்றார்.பலமுறை அதிமுக களம் கண்டாலும் கூட்டணிகள் களம் கொண்டாலும் திமுகவுக்கு சாதகமான தொகுதிகளில் இதுவும் ஒன்று.2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.பத்தாண்டுகள் எம்எல்ஏ ஆக இருந்த திமுகவின் கார்த்திகேயன் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். மேயராகவும் இருந்தவர். ஆனால் இந்த முறை தொகுதி அவருக்கு சாதகமாக இல்லை என்று கருத்து கணிப்பில் தெரிகிறது.மக்களிடையே நெருங்கி பழகினாலும் 15 ஆண்டுகாலம் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்த அவருக்கு எதிர்ப்பலை வீசுவது தெரிகிறது.இதற்கு காரணம் வேலூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர். கே.அப்பு. காட்பாடி தொகுதியில் ஒருமுறையும், வேலூர் தொகுதியில் இரு முறையும் என மூன்று முறை சட்டமன்றத் தொகுதியில் தோல்வியை தழுவினாலும் மக்கள் பணியே மகேசன் பணி என்று தொடர்ந்து களத்தில் இருக்கிறார் அப்பு. அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் சுகத்திற்கும் நிகழ்வுகள் பிரச்சனைகளுக்கு ஓடோடி உதவி செய்யும் அப்புவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து விட வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.இதனால் உற்சாகமாய் வலம் வரும் அப்பு வேலூர் கோட்டையில் இருந்து சென்னை கோட்டைக்குச் செல்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன.நடிகர் விஜய்யின் தவெக வினோத் கண்ணன், நாம் தமிழர் கட்சியின் சோனியா என்று பலர் களம் கண்டாலும் வாக்குகள் பிரிக்கத்தான் தவிர வெற்றிக்கு வித்திட வில்லை.அப்புவின் கனவு நிறைவேறுவதற்கான சாத்திய கூறுகள் தென்படுகின்றன என்பதோடு, வேலூர் கோட்டையின் அரசனாக அப்பு முடி சூடுவார் என்பதில் ஐயமில்லை என்பது வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.










Leave a Reply