சென்னையைச் சேர்ந்த வாலிபர் சதீஷ் சித்தூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பொன்னை அருகே கீரைசாத்து பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்த ₹2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க அதிகாரிகள் வந்தனர் சதீஷ் தனது செல்போனில் இருந்த GST வரி செலுத்திய PDF ரசீதுகளை ஆதாரமாகக் காண்பித்தார்.
டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், அவை உண்மையானவை என உறுதி செய்து, பறிமுதல் செய்த ₹2 லட்சத்தை அங்கேயே அவரிடமே ஒப்படைத்தனர்.











Leave a Reply