கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் 99 மற்றும் நூறாவது வார்டுக்கு உட்பட்ட மயான பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான பெண் குதிரை ஒன்று மதில் சுவரைத் தாண்டி குதிக்க முயன்ற போது அந்தப் பகுதியாக வந்த நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாடு இன்றி அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனது பொதுவாக மிருகங்கள் இதுபோன்று ரோட்டில் நடமாடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை அதே போல் எல்லா தெருகளிலும் தெரு நாய்கள் அதிகமாகி வருவதை தடுக்கவும் இந்த அரசாங்கம் ஒரு முயற்சியும் எடுப்பதில்லை இதன் விளைவாக சிறு குழந்தைகள் தெருவில் விளையாட முடியாமல் பள்ளியில் இருந்து வரும் போது பாதுகாப்பற்ற சூழ்நிலை அதிகமாக அரங்கேறி வருகிறது கோவை மாநகராட்சியில் மிருகங்களால் வரும் பிரச்சனைகளை குறித்து சிறிது அளவு கவலைப்படாமல் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து விட்டோம் என்று பொய்யான போலி பில்களை போட்டு சம்பாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பல்வேறு குற்றங்கள் தெரு நாய்களின் தொல்லைகள் என்று தினந்தோறும் மன உளைச்சலுக்கு குழந்தைகள் ஆளாகி வருகின்றனர் இதனை சரி செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் தக்க நடவடிக்கை எடுப்பார்களா என்ற சந்தேகங்கள் மக்கள் மனதில் அதிக அளவில் இருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்,..