கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் CITU பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு CITU மாநிலக்குழு உறுப்பினர் சத்யா தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சென்னியம்மா மற்றும் கனகாமணி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உழைப்பாளர் மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை பெற்ற தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மருத்துவ சேவையைப் பெறும் நோயாளிகளுக்கு ரொட்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, வசந்தா என்ற முதிய பெண்ணுக்கு உழைப்பாளர் மார்க்கெட் பகுதியில் காய்கறி கடை அமைத்து வழங்கப்பட்டது. “மீன் கொடுப்பதை விட மீன் பிடிப்பதை கற்றுக் கொடு” என்ற பழமொழிக்கேற்ப, இந்த முயற்சியின் மூலம் அவர் வியாபாரம் செய்து தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை முன்னெடுக்க வழி ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சாந்தா ஆனந்தி, மல்லிகா, லட்சுமி, ஜோதி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்













Leave a Reply