செய்யாறில் புரட்சி பாரதம் கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் !செய்யாறு, பிப். 18 -செய்யாறில் புரட்சி பாரதம் கட்சியில், புதிய பொறுப்பாளர்களை வடக்கு மாவட்ட செயலாளர் அ.காளிதாசன் நியமித்துள்ளார். அதற்கான உத்தரவு கடித்தை நேற்று பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராக அழிவிடைதாங்கியைச் சேர்ந்த அ.காளிதாசன் இருந்து வருகிறார். இவரது தலைமையில் கட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று செய்யாறில் நடந்தது. இந்த கூட்டத்தில் செய்யாறு நகர செயலாளராக கொடநகர் காலனியைச் சேர்ந்த வே.தினேஷ், செய்யாறு மேற்கு ஒன்றிய செயலாளராக தண்டரை கிராமத்தைச் சேர்ந்த டி.ஜே.சின்னா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.‌ இதற்கான நியமன கடிதத்தை வடக்கு மாவட்ட செயலாளர் அழிவிடைதாங்கி
அ.காளிதாசன் இவர்களிடம் தனித்தனியாக வழங்கினார். மாவட்ட இணை செயலாளர்
மு.பாரதி முன்னிலை வகித்தார். வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் பூபாலன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். புதிய பொறுப்பாளர்களாக பதவி ஏற்றுக் கொண்ட வே.தினேஷ், டி.ஜே.சின்னா ஆகிய இருவரும் கட்சியின் தலைமை மற்றும் பொறுப்பாளர் இடும் பணிகளை தவறாமல் செய்து முடிப்போம். கட்சியை வளர்ப்பதற்காக உறுதுணையாக நின்று பாடுபடுவோம் என உறுதியளித்தனர்.