காட்பாடி தாராபடவேடு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்:திருமண பக்தர்கள் பங்கேற்பு!

வேலூர்,பிப். 17-
வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேட்டில் சித்தூர்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா 15ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 10:00 மணி வரை நடந்தது. இதில் அப்பாஜி சுவாமிகள்,வேலூர் துணை மேயர் சுனில் குமார்,ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நிர்வாகி பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் காந்தி மற்றும் வேலூர் தொகுதி எம்பி கதிர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கோஷங்களை எழுப்பி பக்தி பரவசத்துடன் ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.