புதிய நீதி கட்சியின் நிறுவனரின் மனைவி லலிதா லட்சுமிக்கு பிறந்த நாள் விழா!வேலூர், ஜன. 31-புதிய நீதி கட்சியின் நிறுவனர், நாடு போற்றும் உன்னத தலைவர், சமுதாய காவலர் டாக்டர் ஏ.சி.சண்முகத்தின் துணைவியார் எஸ். லலிதா லட்சுமியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புதிய நீதி கட்சியின் குடியாத்தம் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். ரமேஷூடன் மாவட்ட மாணவர் அணி தலைவரும், குடியாத்தத்தின் போர்படை தளபதியுமான எஸ். பி. நந்தகுமார் உடன் இருந்தார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பிலிருந்தும், பல்வேறு கட்சிகளில் இருந்தும் பல நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் கைத்தறி காவலன் ரமேஷ் வாழ்த்து தெரிவித்தவர்களுடன் சற்றே தனியாக தெரிந்தது குறிப்பிடத்தக்கது. தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், பரிசு பொருள்களை வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் லலிதா லட்சுமி.