இரண்டாம் நாள் நிகழ்வு
பொங்கல் கலை விழா ஏற்பட்டினை
கலைப் பண்பாட்டு துறை தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மண்டலமும் சங்கரன் கோயில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்
சங்கரன்கோவில் மூப்பிடாதியம்மன் கோவில் முன்புறம் நடைபெற்ற “பொங்கல் கலை “விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் சார்பாக சங்கரன் கோயில் நகர வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் விழாவினை துவங்கி வைத்தார்கள் ,
பாராளுமன்ற உறுப்பினர்
அவர்களும், சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும்
நகர்மன்ற
தலைவர்கள் அவர்களும் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அவர்களும் வருகை புரிந்து கலைஞர்களுக்கு நற்சான்றிதழ்கள் பொற்கிளியும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.
கலைநிகழ்சியில் 60க்கு மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்
சங்கரன்கோவில்
பால்செல்வி முத்துராமலிங்க ஐயா கலைக்குழு வில்லிசை, தென்றல் கலைக்குழு நையாண்டி மேளம் கரகாட்டம், ஓயிலாட்டம், பனவடவலிசத்திரம் விழுதுகள் கலைக்குழு சிலம்பாட்டம் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகளும்
முன்னதாக
சிவநர்த்தனலயா கலைக்குழு பரதநாட்டியம் நடைப்பெற்றது.
மண்டல கலைப்பண்பாட்டுமையம் சார்பாக
தென்காசி ஜவஹர் மன்ற ஆசிரியர்கள்
புருஷோத்தமன், வீரபாண்டியன், மீனாட்சி, முத்தகலைஞர் முத்துராமலிங்கம் அவர்கள்
கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.












Leave a Reply