வேலூர், டிச. 29-
ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் வேலூர் மாவட்டத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2021 தேர்தல் கால வாக்குறுதியின்படி லட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியளார்களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வேலூர் மாவட்ட தலைநகரில் உரிமை மீட்பு வேலைநிறுத்த ஆயத்த மாநாடு வேலூர் பெல்லியப்பா கட்டடத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஜெயகாந்தன், எம்.எஸ்.தீனதயாளன், ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனிவாசன், என் சக்கேயுசத்திய குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்துறை ஒய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி மாநாட்டினை தொடங்கி வைத்து பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கே.வி.ரக்ஷித் சிறப்புரையாற்றினார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ. சேகர், அக்ரி.எ.ராமன், துரை.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து , கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் எஸ்.ரஞ்சன் தயாளதாஸ், மாவட்ட உயர்மட்டக்குழு நிர்வாகிகள் எம்.எஸ்.செல்வகுமார், ஆர்.ஜெயக்குமார், ஜி.டி.பாபு, சோகாராமன், பெ.இளங்கோ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பா.வேலு, வருவாய் துறை அலுவலர் சங்க வி.ரமேஷ், தே.வேந்தன், மு.இளந்தமிழன் எஸ்.ஜோதி எம்.ஏழுமலை ம.தேவசேனன், ஆதிகேசவன், துரைராஜ், உள்ளிட்ட ஆசிரியர் அரசு ஊழியர் பணியாளர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் பேசினர்.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.வேலூர் மாவட்டத்தில் பணியிலிருக்கும் 8000 ஆசிரியர் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஜனவரி-6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
2.டிசம்பர் 29ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை வேலை நிறுத்த பிரச்சார இயக்கங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
3.ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்றிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.











Leave a Reply