சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தில் கொத்தூர் காலனி ஊர் பொதுமக்கள் பட்டா கேட்டு மனு!

வேலூர், டிச. 18-
வேலூர் மாவட்டம் ,பரதராமி அடுத்த கொத்தூர் கிராமம் விழுதோன் பாளையம் ஊர் பொதுமக்கள் கடந்த 35 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுவரையும் அவர்களுக்கு பட்டா வழங்கவில்லையாம். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வீட்டுக்கு கூரை வரி, தரை வரி, இ.பி., பில் கட்டி வாழ்ந்து வருகின்றனர். மேலும் இது குறித்து ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தில் முறையிட்டனர். சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் ச. கௌரி தலைமையில், அந்த ஊர் பொதுமக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வேலூரில் கடந்த திங்கட்கிழமை காயிதே மில்லத் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.