வேலூர்,டிச.9-
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடந்தது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் அளித்து விரைவில் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த குறைதீர்வு முகாமில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரச அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.











Leave a Reply