முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் 9 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

அதிமுக கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 05) பெரம்பலூர் மாவட்ட கழகம் செந்துறை தெற்கு ஒன்றிய கழக அலுவலகத்தில் அமைந்துள்ள அம்மாவின் திரு உருவ சிலைக்கு செந்துறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம் எஸ்.ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கிளைக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.