குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை!வேலூர், மார்ச் 22-21.03.2026 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.இந்த சிறப்பு தொழுகையில் அதிமுக நகர செயலாளர் ஜே. கே. என். பழனி, மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி ஆகியோர் இஸ்லாமிய பெருமக்களுடன் தொழுகையில் கலந்து கொண்டு ஹபீப் டானிங் பேக்டரி, எஸ். பீடி குழுமத்தின் ஆலி ஜனாப் ஏ.முகம்மது ஆமின்சாஹிப்,, ஏ.முகம்மது அசரப், ஏ. முகம்மது, ரகுமான் ஆகியோருக்கு சால்வை அணிவித்து ஒருவரையொருவர் ஆர கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் நகர மன்ற துணைத்தலைவர் எம்.பூங்கொடி மூர்த்தி, எஸ். ஐ. அன்வர் பாஷா, வி. இ. கருணா, ஆர்.ரவிச்சந்திரன், எல். ஏ. அன்பழகன், ஏ.சிட்டிபாபு,கோல்ட் வி. குமரன், டிஷ் மோகன், பரமாத்மா, தீனதயாளன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்யாறு அடுத்த அனக்காவூர் அ.தி.மு.க., மேற்கு ஒன்றியத்தில்15 வாக்குறுதிகள் குறித்து துண்டு பிரசுரங்கள் கிராம மக்களுக்கு வழங்கல்!செய்யாறு, மார்ச் 22 -செய்யாறு அருகே சட்டமன்றதேர்தலையொட்டி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த முதற்கட்ட 15 தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு அதிமுகவினர் வழங்கினர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனக்காவூர், அத்திகுளம், விநாயகபுரம் உள்ளிட்ட கிராமபொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செய்யாற்றை வென்றான் துரை ஏற்பாட்டில் நடந்தது.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு வீடு வீடாகச் சென்று அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகளான அரங்கநாதன், சேகர், நகர செயலாளர் வெங்கடேசன், ஜனார்த்தனன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ், சுரேஷ், கன்னியப்பன், பொன்னுரங்கம், வெங்கடேஷ், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது2026 ஆம் ஆண்டிற்கான புனித ரமலான் மாத நோன்பு தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் உற்சாகத்துடன் தொடங்கப்பட்டுள்ளதுரம்ஜான்பண்டிகை (ஈத்-உல்-பித்ர்)ரமலான் மாத இறுதியில் ஷவ்வால் மாதப் பிறை தென்பட்டதும் ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படும்.இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான இந்த நோன்பு அதிகாலை முதல் மாலை சூரியன் மறையும் வரை உணவோ நீரோ அருந்தாமல் இறை சிந்தனையுடன் கடைப்பிடிக்கப்படுகிறதுஏழைகளின் பசியை உணர்தல், தர்மம் செய்தல் மற்றும் சமுதாய ஒற்றுமையை வலியுறுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் முப்பது நாட்கள் ஆன்மீகப் பயணத்திற்குப் பிறகு மனக் கட்டுப்பாட்டை வளர்த்தல் மற்றும் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருதல்இந்த மாதத்தில் திருக்குர்ஆனை அதிகமாக ஓதுதலும், இரவு நேர சிறப்புத் தொழுகைகளும் (தராவிஹ்) முக்கியத்துவம் பெறுகின்றனசமூக நல்லிணக்கம் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்றனர்உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அமைதி, கருணை மற்றும் ஒற்றுமையுடன் ரமலான் திருநாளை கொண்டாடுகின்றனர் ஈத்கா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு ரமலான் தொழுகையில் பெரியவர் முதல் சிறியவர்கள் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர் சிறப்பாக நடைபெற்ற தொழுகையில் 100 வயதை கடந்த இப்ராஹிம் என்னும் மூத்த சகோதரர் கலந்து கொண்டர்கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ள வட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவின் பெயரில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் இஸ்லாமிய சகோதரர்கள் சார்பாக மருத்துவம் ,குடிநீர் மற்றும் தொழுகைக்கு தேவையான வசதிகளை தன்னார்வலர்கள் செய்தனர்