வேலூர் அருகே செங்கல் சூளையில் மாதம் ரூ.1 லட்சம் மாமூல் வர வேண்டும்”: தவெக ஒன்றிய செயலாளர்.. செங்கல் சூளை உரிமையாளரிடம் மிரட்டல்!வேலூர், மே 24-தமிழ்நாட்டில் தவெக சர்க்கார் அதிகாரத்திற்கு வந்து இன்னும் முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்நிலையில் வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடையே மாதம் ரூ.1 லட்சம் பணம் மாமுல் கேட்டு தவெக ஒன்றியச் செயலாளர் மிரட்டியிருப்பது தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை எதிர்கொண்டிருந்தது. தேர்தலிலும் பிரமாண்ட வெற்றியைப் பெற்று கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தங்களின் தவெக சர்க்காரை அமைத்துள்ளது. இப்படி இருக்கையில் புது சர்க்காருக்கு அவதூறு ஏற்படுத்துவதைப் போல நிர்வாகிகள் சிலர் நடந்துக் கொண்டிருப்பது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.வேலுர் மாவட்டம், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளடங்கிய கணியம்பாடியில், தவெக ஒன்றியச் செயலாளர் ஒருவர் செங்கல் சூளை தொழிலாளர்களிடம் வலுகட்டாயமாக ரூ.1 லட்சம் மாமூல் கேட்டிருக்கிறார். இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,”நாங்கள் காலங்காலமாக இங்கு செங்கல் சூளை நடத்தி வருகிறோம். இது எங்கள் குடும்ப தொழில். கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதைவிட்டால் எங்களுக்கு வேறு வேலை தெரியாது. ஆனால், இப்போது தவெக ஒன்றியச் செயலாளர் வந்து மாதம் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டுமென மிரட்டுகிறார்.எங்களைப் போல தொழில் செய்யும் பலரையும் அவர் மிரட்டியிருக்கிறார். பணம் தரவில்லை எனில் வேலை நடக்காது என்றும், வேலை செய்ய விட மாட்டோம் என்றும் பயமுறுத்துகிறார். மேலிடத்தில் சொல்லிதான் இப்படி செய்வதாகவும், இந்த இடத்திற்கு வர லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பதாகவும், அதை திரும்ப எடுக்கத்தான் இப்படி வசூலிப்பதாகவும், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் சொல்லிதான் இப்படி செய்வதாக கூறியிருக்கிறார்.தவெக சர்க்கார் அதிகாரத்திற்கு வந்து இன்னும் 30 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் கட்சியின் பெயரை சிலர் இப்படி டேமேஜ் செய்கிறார்கள். என்னிடம் பணம் கேட்டு மிரட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது. உரிய நேரத்தில் வெளியிடுவேன். இந்த மிரட்டல் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.வேலூர் மட்டுமல்ல.. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து விஷயத்தில் தவெகவினர் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். மாற்றம் என்று சொல்லிக்கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்திய முதலமைச்சராக தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் இருக்க வேண்டும். இப்படியான கட்டப்பஞ்சாயத்து விஷயங்களை விஜய் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று வணிகர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.