மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நாயகர் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் தளபதியார் அவர்களின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி செந்தில்பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில் கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை சூலூர் வடக்கு ஒன்றியம் இராசிபாளையம் ஊராட்சி அருகம்பாளையத்தில் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்தார்.

காட்பாடி அருகே கோர விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் பலி!வேலூர், மார்ச் 12-காட்பாடி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவரின் தலை லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், நஞ்சுகொண்டாபுரம் அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கவியரசன் (19). இவர் வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் மாலையில் கல்லூரி முடிந்து, கவியரசன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வள்ளிமலையில் உள்ள மற்றொரு நண்பரைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதியது.இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த கவியரசனின் தலை, லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. இதில் அவர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார், கவியரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நண்பரைப் பார்க்கச் சென்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரணாம்பட்டில் அறிஞர் அண்ணா துரையை மறந்த அதிமுகவினர்!வேலூர், மார்ச் 11-நேற்றைய முன் தினம் பேரணாம்பட்டு நகர அதிமுகவினர் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக விநியோகித்து வந்தனர். அந்தத் துண்டு பிரசுரத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான ஜான் பாண்டியன்,  பாவேந்தர்,  ஜி. கே. வாசன் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள், முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வேலழகன் ஆகியோரது படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. பொதுவாக அதிமுக நோட்டீஸ்களில் அறிஞர் அண்ணாதுரையின் படங்கள் இடம்பெறும். ஆனால் இந்த துண்டு பிரசுரத்தில் பெரியார், அண்ணா படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது பேரணாம்பட்டு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது