பேரணாம்பட்டில் அறிஞர் அண்ணா துரையை மறந்த அதிமுகவினர்!வேலூர், மார்ச் 11-நேற்றைய முன் தினம் பேரணாம்பட்டு நகர அதிமுகவினர் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக விநியோகித்து வந்தனர். அந்தத் துண்டு பிரசுரத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான ஜான் பாண்டியன்,  பாவேந்தர்,  ஜி. கே. வாசன் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள், முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வேலழகன் ஆகியோரது படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. பொதுவாக அதிமுக நோட்டீஸ்களில் அறிஞர் அண்ணாதுரையின் படங்கள் இடம்பெறும். ஆனால் இந்த துண்டு பிரசுரத்தில் பெரியார், அண்ணா படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது பேரணாம்பட்டு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது

காட்பாடி கல்புதூரில் மழலையர் பள்ளி ஆண்டு விழா: காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் ஜனார்த்தனன் பரிசுகள் வழங்கல்!வேலூர், மார்ச் 10-காட்பாடி மெட்டுக்குளம் இஹன்ட் மழலையர் பள்ளியின் ஆண்டு விழா கல்புதூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கு பள்ளியின் நிர்வாக இயக்குநர் பிரித்தி தலைமை தாங்கினார். தலைமையாசிரியை ஹீரா வரவேற்று பேசினார்.காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், பாத் பைன்டர்ஸ் அறக்கட்டளையின் இயக்குநர் ஆர்.சுதாகர், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி பேசினர்.கடந்த ஒரு ஆண்டில் குழந்தைகள் கற்றல், திறமை, ஒழுக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் பெற்ற வளர்ச்சியை கொண்டாடும் நாள் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பல்வேறு நடனம், பாடல், நாடகம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், குழந்தைகளின் முயற்சி மற்றும் சாதனைகளை பாராட்டும் விதமாக விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இவ்விழாவில் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.