பொதிகை நகரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுமா?

சங்கரன்கோவில், டிச.3 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட பொதிகைநகரில்  சுமார் 250 குடும்பங்கள் வசித்துவருகிறார்கள். இப்பகுதியில் தெருவிளக்கு வசதி,  ரோடு வசதி,
குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இந்தப் பகுதியில் தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.