குடியாத்தத்தில் போதை பொருளை வீட்டில் தயாரித்த தொழிலதிபர் கைது!

வேலூர், ஜன. 13-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நரிமுருகப்ப முதலி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாவா எனப்படும் போதை பொருளை இயந்திரம் வைத்து தயாரித்த கோதண்டபானி (48) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் போதை பொருளை தயாரித்தது அம்பலம் ஆனது.   அங்கிருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகள், உயர் ரக சுண்ணாம்பு மற்றும் 10 கிலோ அளவுக்கு மாவா போதைப்பொருள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த தகவல் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.