மன அழுத்தத்தால் ராணுவ வீரர் தூக்கு மாட்டி தற்கொலை!

வேலூர், நவ.20 –
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த அகரம் ஊராட்சிக்குட்பட்ட எடத்தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் ( 32) .இவருக்கு வேலை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதாவது இவர் ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மன அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக அவர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நிலத்தில் சந்தோஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் இருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு மரத்தில் இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்த சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.