வேலூர், நவ.28-
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனனின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் அளித்து குறைகளை கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வாரத்திலுள்ள அனைத்து வேலை நாட்களிலும், பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 26.11.2025-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனின் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுமக்கள் குறை தீர்வு மனு நாளில், 35 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து அவர்களுக்கு தீர்வு காணப்படுகிறது என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை மட்டுமின்றி அனைத்து வேலை நாட்களிலும் புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கி தீர்வு காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











Leave a Reply