வேலூர்,டிச.23-
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.











Leave a Reply