வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்!

வேலூர்,நவ.4-
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் பொதுமக்கள் பல்வேறு தரப்பட்ட மனுக்களை வழங்கினர். அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் சுமார் 46 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மது செழியன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.