செய்யாறு அடுத்த அனக்காவூர் அ.தி.மு.க., மேற்கு ஒன்றியத்தில்15 வாக்குறுதிகள் குறித்து துண்டு பிரசுரங்கள் கிராம மக்களுக்கு வழங்கல்!செய்யாறு, மார்ச் 22 -செய்யாறு அருகே சட்டமன்றதேர்தலையொட்டி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த முதற்கட்ட 15 தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு அதிமுகவினர் வழங்கினர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனக்காவூர், அத்திகுளம், விநாயகபுரம் உள்ளிட்ட கிராமபொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செய்யாற்றை வென்றான் துரை ஏற்பாட்டில் நடந்தது.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு வீடு வீடாகச் சென்று அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகளான அரங்கநாதன், சேகர், நகர செயலாளர் வெங்கடேசன், ஜனார்த்தனன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ், சுரேஷ், கன்னியப்பன், பொன்னுரங்கம், வெங்கடேஷ், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.