
காட்பாடி அடுத்த கசம் சிறுவர் இல்லத்தில் திமுக சார்பில் துணை மேயர் அன்னதானம் வழங்கல்!வேலூர்,மார்ச் 2-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கசம் கிராமத்தில் உள்ள கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லம் உள்ளது. இந்த சிறுவர் இல்லத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த சிறுவர் இல்லத்தில் திமுக சார்பில் வேலூர் மாநகராட்சி துணை மேயரும், காட்பாடி தெற்கு பகுதி செயலாளருமான எம்.சுனில்குமார் தலைமை வகித்து சுமார் 73 கிலோ எடையுடைய கேக்கை வெட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினின் 73 வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடினார். இந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியை தொடர்ந்து, தமிழக முதல்வரின் ஆரோக்கியத்திற்கும் ,அவர் ஆயுள் நீடிக்கவும் வேண்டி சிறப்பு ஜெபம் நடந்தது. இதை தொடர்ந்து அந்த 500 சிறுவர், சிறுமிகளுக்கு நண்பகல் வேளையில் மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதை வரிசைப்படி வந்து நின்று சிறுவர், சிறுமியர் வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இந்த பிரியாணியை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் ,உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவருமான டீட்டா சரவணன் மற்றும் பல்வேறு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Leave a Reply