காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் குடியரசு தின விழா!வேலூர்,ஜன.27-வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில குடியரசு தின விழாவை முன்னிட்டு அலுவலகம் முழுவதும் வண்ணக் கொடிகளாலும் ,அலங்கார ஜரிகை பேப்பர்களாலும் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது. சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்தி கொடிக் கம்பத்தை சரி செய்து அதில் தேசியக் கொடியை ஏற்ற தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில் காலை 8:30 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த சார் பதிவாளர் பிரகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதைய டுத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த எளிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார் சார் பதிவாளர் பிரகாஷ்.