வேலூர், நவ.10-
வேலூர் மாவட்டம், காட்பாடி அரிமா சார்பில் சேவை திட்டங்கள் தொடக்க விழா காட்பாடியில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த விழாவுக்கு தலைவர் சோகா ராமன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக விஐடி பல்கலைக்கழகத்தின் உதவி துணைத் தலைவர் காதம்பரி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாவட்ட முதல் துணை ஆளுநர் பூர்ணசந்திரன், முன்னாள் அமைச்சர் வி. எஸ் .விஜய் ,ரெட் கிராஸ் சங்க அவைத் தலைவர் ஜனார்த்தனன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











Leave a Reply