அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 02.10.2025 காந்தி ஜெயந்தி அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் 11.10.2025 அன்று நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் பின்வரும் பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளது.
- கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல்.
- சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல்.
- கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல்.
- கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை.
- ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
- கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
- வடகிழக்கு பருவழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
- சபாசார் செயலி செயல்பாடுகள்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்.
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II.
- தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம்.
- தொழிலாளர் துறை.
- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.
- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நறுவனம் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம்.
- இதர பொருட்கள் குறித்தும் விரிவாக விவாதித்தல் .
எனவே, மேற்காணும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.











Leave a Reply