வளத்தூர் ரயில் நிலையம் அருகில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் தலை சிதைந்த நிலையில் பலி!

வேலூர்,நவ.13-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம்,  வளத்தூர் உள் வட்டம் வளத்தூர் கிராமத்தில் ரயில்வே கம்பம் எண் 126/ 26 அருகில்  ரயில் தண்டவாளத்தில் தலை முழுவதும் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார் .
அவருக்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தாரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து  ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.