செய்யாறு கலைஞர் சிலை அருகே5-ம் நாள் அன்னதானம் வழங்கல்!

செய்யாறு, ஜன. 3 –
செய்யார் கலைஞர் சிலை அருகே நான் 5ம் நாளான நேற்று
மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதையடுத்து மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு மற்றும் தி.மு.க., பொறுப்பாளர்கள் பொதுமக்கள் 500  பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்களான  வேல்முருகன், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் என்.சங்கர்,  ஞானவேல், திராவிட முருகன்,
எம்.கே.கார்த்திகேயன், அசோகன், ரமேஷ், ராம்ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.