காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் குடியரசு தின விழா!வேலூர்,ஜன.27-வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில குடியரசு தின விழாவை முன்னிட்டு அலுவலகம் முழுவதும் வண்ணக் கொடிகளாலும் ,அலங்கார ஜரிகை பேப்பர்களாலும் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது. சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்தி கொடிக் கம்பத்தை சரி செய்து அதில் தேசியக் கொடியை ஏற்ற தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில் காலை 8:30 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த சார் பதிவாளர் பிரகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதைய டுத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த எளிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார் சார் பதிவாளர் பிரகாஷ்.

மேட்டுப்பாளையம் காவல் நிலையம் 26.01.1926 ஆம் ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று நூறாவது ஆண்டை கொண்டாடும் வேலையில் காவல் நிலையத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு மரு. கார்த்திகேயன் IPS ஐயா அவர்களின் வழிகாட்டுதலில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு பாஸ்கர் அவர்கள் மேற்பார்வையில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் மூன்றாவது சிறந்த காவல் நிலையமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு மு க ஸ்டாலின் அவர்களிடம் முதலமைச்சர் கோப்பையை மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் திரு சின்னக்காமணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு ஒத்துழைப்பு அளித்த மேட்டுப்பாளையம் நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்